
Event Date: 11 Jun 2025 - 20 Jun 2025
2002 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைகுழு சட்டத்தின் பிரிவு 17 இன் கீழ் ஆணைகுழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்தப் பொது ஆலோசனை நடத்தப்படுகிறது.
இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 550 மின்சார மரணங்கள் பதிவாகியுள்ளன, மேலும் 2024 ஆம் ஆண்டில் மட்டும் 120 மின்சார மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த மின்சார மரணங்களில் சுமார் 40% மின் விபத்துகள் அல்லது செயல்படாத RCCBகள் காரணமாக நிகழ்ந்துள்ளன, இதில் அதிக மரணங்கள் குருநாகல் மற்றும் கம்பஹா காவல் பிரிவுகளில் பதிவாகியுள்ளன. இந்த மின்சார மரணங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளில், அவை முக்கியமாக மின் நிறுவல்களில் ரிப் சுவிட்சுகள் (RCCBகள்) இல்லாதது, அவற்றின் செயலிழப்பு மற்றும் பொதுமக்களின் அறியாமை காரணமாக ஏற்பட்டவை என்பது தெரியவந்துள்ளது. செயல்பாட்டில் உள்ள ரிப் சுவிட்ச் (RCCB) நிறுவப்பட்டிருந்தால் இந்த மின்சார மரணங்கள் அனைத்தையும் தடுத்திருக்கலாம்.
இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ரிப் சுவிட்சுகள் (RCCBகள்) இல்லாததாலோ அல்லது செயலிழந்தாலோ ஏற்படும் மின் மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்க, பொதுமக்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் ஆலோசனை அமர்வுகளை நடத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விவரங்களைக் கொண்ட ஆலோசனைக் பத்திரத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
இந்த அமர்வில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை சமர்ப்பிக்க அனைத்து பங்குதாரர்களும் பொதுமக்களும் அழைக்கப்படுகிறார்கள்.
திட்டமிடப்பட்ட பொது ஆலோசனை அமர்வுகள்:
கம்பஹா மாவட்டம்
இடம் – கம்பஹா மாவட்ட செயலக கேட்போர் கூடம்
திகதி – 17 ஜூன் 2025
நேரம்: காலை 9.00 மணி
பதிவு செய்ய அழைக்கவும்: 077 0399119
குருநாகல்மாவட்டம்
இடம் – குருநாகல் மாவட்ட செயலக கேட்போர் கூடம்
திகதி – 19 ஜூன் 2025
நேரம்: காலை 9.00 மணி
பதிவு செய்ய அழைக்கவும்: 071 4393018
தொலைபேசி: (011) 2392607-8
பெக்ஸ்: (011) 2292641