ஊடக அறிக்கை – Electricity Tariff Revision 2024
திங்கள், 4 மார்ச் 2024 |

 

  • இன்று நள்ளிரவு முதல் மின்சாரக் கட்டணம் 9 வீதத்தால் குறைக்கப்படும்
  • 30 அலகுகளுக்கு குறைவான பிரிவில் பாவனையாளர்களுக்கு அலகுகளுக்கான கட்டணம் 33 வீதத்தால் குறைப்பு
  • 31 மற்றும் 60 அலகுளுக்கு இடைப்பட்ட பாவனையாளர்களின் மின்கட்டணம் 28 சதவீதத்தால் குறைந்துள்ளது
  • 60 முதல் 90 அலகுளுக்கு இடைப்பட்ட பாவனையாளர்களின் மின்கட்டணம் 30 சதவீதம் குறைகிறது
  • 90 மற்றும் 180 அலகுளுக்கு இடைப்பட்ட பாவனையாளர்களின் மின்கட்டணம் 24 சதவீதம் குறைந்துள்ளது
  • 180 அலகுளுக்கு மேல் உள்ள வீட்டு மின் பாவனை பிரிவினருக்கு மின்கட்டணம் 18 சதவீதத்தால் குறைப்பு
  • வழிபாட்டுத் தலங்களுக்கு 33 சதவீத குறைப்பு
  • ஹோட்டல் மற்றும் தொழில்துறை துறைகளின் மின் கட்டணம் 18 சதவீத குறைப்பு
  • பொது நோக்கம் பிரிவில் 23 சதவீதம் குறைவு
  • பொதுத்துறைக்கு 22 சதவீதம் மின்சார கட்டணம் குறைக்கப்படும்.
  • வீதி விளக்குகளுக்கு 20 சதவீதம் சலுகை

 

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி  மின்சாரக் கட்டணத்தின் மொத்தமாக 21.9 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.. இந்த மின்சார கட்டணத் திருத்தத்தில் இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் செலவுத் தரவுகள் 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30 ஆம் பிரிவின் விதிகள் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு மதிப்பாய்வு செய்யப்பட்டன. பின்னர் இறுதி முடிவு எட்டப்பட்டது. இலங்கை மின்சார சபை கடந்த ஜனவரி மாதம் 3.34 வீதத்தால் கட்டணத்தை குறைக்க அனுமதி கோரியிருந்தது. பின்னர் பெப்ரவரி 22 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட முன்மொழிவில் 14 வீதத்தால் கட்டணத்தை குறைக்க முன்மொழிந்தது. இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட செலவுத் தரவுகள் மற்றும் பொதுமக்கள் ஆலோசனையின்போது முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மீளாய்வு செய்ததைக் கருத்தில் கொண்டு, மின்சார கட்டணங்களை 21.9 வீதத்தால் குறைக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

 

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் இந்த கட்டண திருத்தத்தின்படி அனைத்து மின்சார பாவனையாளர் பிரிவினருக்கும் அதிகபட்ச நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. வீட்டு மின்சார பாவனை பிரிவில் 30 அலகுகளுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு 33 சதவீத மின்சார கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. 31 முதல் 60 அலகுகளுக்கு இடைப்பட்ட மின்சார பாவனையாளர்களுக்கு 28 சதவீத கட்டண குறைக்கப்பு வழங்கப்பட்டுள்ளது. 61 முதல் 90 அலகுகளுக்கு இடைப்பட்ட மின்சார பாவனையாளர்களுக்கு 30 சதவீத கட்டண குறைக்கப்பு வழங்கப்பட்டுள்ளது. 90 அலகுகளுக்கு மேல் மற்றும் 180 அலகுகளுக்குக் குறைவான மின்சார பாவனையாளர்களுக்கு 24 வீதத்தாலும், 180 அலகுகளுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு 18 வீதத்தாலும் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டணத்தை 33 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

 

பொது நோக்கத்திற்கான மின்சார பாவனையாளர் பிரிவினர்க்கு 23 சதவீத கட்டணம் குறைக்கப்படும். பொது அரச நிறுவனங்களின் வகைக்கு 22 சதவீதம் கட்டணம் குறைக்கப்படும். ஹோட்டல் மற்றும் தொழில் துறைகளுக்கான கட்டணங்கள் 18 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணம் 20 சதவீதம் குறைக்கப்படும்.

 

புதிய கட்டண முறையின்படி, 30 அலகுகளுக்கு குறைவான மின்சார பாவனையாளர்களின் மின்சார மாதாந்த நிலுவை  கட்டணம் 180 ரூபாயில் இருந்து 150 ரூபாயாக குறைக்கப்படும். அவர்கள் செலுத்தும் ஒரு அலகுக்கான விலை 12 ரூபாவில் இருந்து 8 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. 31 முதல் 60 அலகு வரை மின்சார பாவனையாளர்களின், மாதாந்த நிலுவை கட்டணம் 360 ரூபாய் 300 ரூபாவாகவும், அந்த வகைக்கான ஒரு அலகிற்கான விலை 30 ரூபாவிலிருந்து 20 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு மின்சார பாவனை வகைகளுக்கான மாதாந்த நிலுவை கட்டணம் மற்றும் ஒரு அலகுக்கான கட்டணம் குறைக்கப்பட்ட முறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வீட்டு மின்சார பாவனையாளர்கள் பிரிவு தற்போதைய அங்கீகரிக்கப்பட்ட அலகொன்றின்  விலை புதிய அலகொன்றின் விலை தற்போதைய  மாதாந்த நிலுவை கட்டணம் அங்கீகரிக்கப்பட்ட புதிய மாதாந்த நிலுவை கட்டணம்
0-30 12 10 180 150
31-60 30 20 360 300
60 அலகுகளுக்கு மேல்  
60 முதல் அலகுகளுக்கு 38 25    
60 அலகுகளுக்கு மேல் 90 அலகுகளுக்கு குறைவான 41 30 480 400
90 அலகுகளுக்கு மேல் 120 அலகுகளுக்கு குறைவான 59 50 1,180 1,000
120 அலகுகளுக்கு மேல் 180 அலகுகளுக்கு குறைவான 59 50 1,770 1,500
180 அலகுகளுக்கு மேல் 89 75 2,360 2,000
           

 

கூரை மேல் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களின் உரிமையாளர்களுக்கு நிலுவைத் தொகை மற்றும் வரியை இம்மாதம் 31 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டு புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியை இலக்காகக் கொண்ட திட்டங்களைத் தயாரித்து ஜூன்  30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிபந்தனைகளை விதித்துள்ளது.

 

இந்த கட்டண முறையை அமுல்படுத்துவதுடன் மேற்படி நிபந்தனைகள் உட்பட 13 நிபந்தனைகளை இலங்கை மின்சார சபை அமுல்படுத்த வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

 

மேலதிக தகவல்களுக்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பெரு நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் திரு.ஜெயநாத் ஹேரத்தை 0772943193 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

ஊடக அறிக்கை

Letter to CEB (04-03-2024)

Letter to LECO (04-03-2024)