இலங்கையில் மின்சாரத் துறைக்கான பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு ஒழுங்குறுத்துகை நிறுவனமாகவும், நீர் வழங்கல் சேவைகள் மற்றும் பெற்றோலியத் தொழிற்த்துறைக்கான நியமிக்கப்பட்ட ஒழுங்குறுத்துகை அமைப்பாகவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உள்ளது. ஒழுங்குபடுத்தப்பட்ட தொழில்களில் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முதன்மை செயல்பாடாகும்.
2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் அடிப்படையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட இந்த விதிகள் மின்சாரம் (பிணக்குகள் தீர்வு நடைமுறை) விதிகள் என்று அழைக்கப்படுகின்றன. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட மத்தியஸ்த சபையின் உறுப்பினர்களாக பணியாற்ற தகுதிவாய்ந்த நிபுணர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
மின் பொறியியல், இயந்திர பொறியியல், சட்டம் மற்றும் நிர்வாகம் ஆகிய துறைகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களைக் கொண்ட சபையானது ஆணைக்குழுவிற்கு தகராறுகளைத் தீர்ப்பதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தவும் பரிந்துரைக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் தேவை அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள், மேலும் பயணம், கூட்டங்களில் கலந்துகொள்வது மற்றும் இறுதி அறிக்கைகளைத் தயாரிப்பதற்கென நியாயமான உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதிகளைப் பூர்த்தி செய்யப்பட வேண்டும்
விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஏனைய ஆவணங்கள்
பிணக்குகள் தீர்வு நடைமுறை தொடர்பான தகவல்களை ஆணைக்குழுவின் இணையதளத்தை (www.pucsl.gov.lk) பார்வையிடுவதன் மூலமோ அல்லது ஆணைகுழுவின் நுகர்வோர் விவகாரப் பிரிவை 0112392607/8 என்ற தொலைபேசி விளக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலமோ பெறலாம்.
விண்ணப்பங்களை 06.02.2026 அன்று அல்லது அதற்கு முன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தலைவர்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
6வது மாடி, இலங்கை வங்கி வர்த்தக கோபுரம்,
இல: 28, சென் மைக்கல்ஸ் வீதி,
கொழும்பு – 03.
தொலைபேசி: 011-2392607/8 தொலைநகல்: 011-2392641
மின்னஞ்சல்: careers@pucsl.gov.lk
இணையதளம்: www.pucsl.gov.lk