இலங்கையில் அனல் மின் உற்பத்தியின் வெளிப்புற செலவு மதிப்பீடு செய்வதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை
வெள்ளி, 12 ஜூன் 2020 |

இந்நாட்டிலுள்ள அனல் மின் (எரிபொருள், நிலக்கரி) நிலையங்களின் வெளிப்புற செலவு மதிப்பீடு செய்வதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. சமூக பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் எரிபொருள் மற்றும் டீசல் மின் உற்பத்தி நிலையங்களின் தாக்கத்தை இந்த ஆய்வு மதிப்பிடுகிறது. தற்போது இலங்கையில்  இயங்கிவரும் நான்கு வகையான அனல் மின் நிலையங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம், யுகதனவி மின் உற்பத்தி நிலையம், கெலனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் மற்றும் சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் என்பனவே அவை. எதிர்காலங்களில் நீர்மின் நிலையங்கள், காற்று மற்றும் சூரிய மின் நிலையங்கள் மற்றும் இயற்கை எரிவாயு நிலையங்களின் சமூக, பொருளாதார, சுற்றுசூழல் தாக்கத்தை மதிப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலின் பொருளாதார செலவு மற்றும் மேற்கண்ட ஆய்வின் மூலம் உருவாக்கப்பட்ட வெப்ப மின் உற்பத்தி நிலையங்களின் வெளிப்புற பொருளாதார செலவுகள் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தின் மீதான எதிர்மறையான தாக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வெளிப்புற செலவுகள் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நேரடி செலவுக்கு கூடுதலாக உள்ளன.

 

 

அனல் மின் உற்பத்தி நிலையத்தின் பெயர்

01 கிலோவாட் உற்பத்தி செய்வதற்கான வெளிப்புற பொருளாதார செலவுகள்

1

லக்விஜய (நுரைச்சோலை) மின் உற்பத்தி நிலையம் (நிலக்கரி)

10.23

2

யுகதனவி மின் உற்பத்தி நிலையம் (உலை எண்ணெய்)

4.53

3

கெலனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையம (டீசல்)

7.55

4

சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் (உலை எண்ணெய்

4.65

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இலங்கைக்கு பொருத்தமான புள்ளிவிபரங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு படியாக இலங்கையில் அனல் மின் உற்பத்தியின் வெளிப்புற செலவை மதிப்பிடுவது குறித்த ஆய்வை இ.பொ.ப.ஆ. நிறைவுசெய்தது. இந்நிலையில், இலங்கையில் புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான மின் உற்பத்தியுடன் தொடர்புபடுத்தி இந்த முறையையும், வெளிப்புற செலவுகளையும் சரிபார்க்க இ.பொ.ப.ஆ. உத்தேசித்துள்ளது. 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இ.பொ.ப.ஆ. சட்டம் மற்றும் 2009 ஆம் ஆண்டின் இலங்கை மின்சாரச் சட்டம் 20 ஆகியவற்றின் கீழ் இந்த ஆலோசனை நடைபெறும். அதன்படி, ‘இலங்கையில் அனல் மின் உற்பத்தியின் வெளிப்புற செலவு மதிப்பீடு’ பற்றிய ஆய்வின் முடிவுகள் குறித்த தங்கள் கருத்துகள் மற்றும் திட்டங்களை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க இ.பொ.ப.ஆ., பங்குதாரர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

பொது ஆலோசனையின் எழுத்து மூலமான சமர்ப்பிப்புகள் நிறைவடைந்ததன் பின்னர், இறுதி கட்டமாக வாய் மூலமான சமர்ப்பிப்புகளை வழங்குவதற்கு பங்குதாரர்களுக்கு இடமளிக்கப்படும். வாய்மூலமான ஆலோசனைக்கான திகதி மற்றும் ஏனைய விபரங்கள் எழுத்து மூலமான சமர்ப்பிப்புகள் நிறைவடைந்ததன் பின்னர் அறிவிக்கப்படும். ஆலோசனைப் பத்திரம் மற்றும் ஆய்வின் இறுதி வரைவு அறிக்கை ஆணைக்குழுவின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துமூல கருத்துக்களை ஜூலை 3, 2020 அன்று அல்லது அதற்கு முன் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்க வேண்டும். ‘இலங்கையில் அனல் மின் உற்பத்தியின் வெளிப்புற செலவு மதிப்பீடு’ பற்றிய பொது ஆலோசனை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 6 ஆவது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம், இல: 28, புனித மைக்கல்ஸ் வீதி, கொழும்பு-3. மின்னஞ்சல் மூலம் consultation@pucsl.gov.lk ஆலோசனைப் பத்திரம் மற்றும் ஆய்வின் இறுதி வரைவு அறிக்கை ஆணைக்குழுவின் www.pucsl.gov.lk எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு பெருநிறுவன தொடர்பாடல் பிரிவின் உதவி பணிப்பாளர் அனுஷிகா கம்புருகமுவ அவர்களை 0718622800  என்ற இலக்கத்தினூடாக தொடர்புகொள்ளவும்.

ஊடக அறிக்கை